போலீசாருடன் பணியாற்றிய சசிகுமார்.. வாகன ஓட்டிகளுக்கு அட்வைஸ்..

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மக்களை வீட்டினுள் இருக்கும்படி ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இருப்பினும் சிலர் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் காவல்துறைக்கு இடையூறு தரும் வகையில் ரோடுகளில் சுற்றித் திரிகின்றனர்.

இந்நிலையில் சுப்ரமணியபுரம் ஹீரோ மற்றும் திரைப்பட இயக்குனருமான சசிகுமார் கொரோனா தடுப்புக்காக மதுரை காவல்துறையுடன் ஒரு நாள் வாலண்டியராக (தன்னார்வலராக ) பணியாற்றியுள்ளார். ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் திரியும் வாகனங்களில் மக்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார்."நாம் நலமாக இருக்க போலீசார் வீட்டை பிரிஞ்சு கஷ்டப்படுகிறார்கள். அதைப் புரிந்து கொண்டு நாம தான் ஒத்துழைக்க வேண்டும்” என வாகன ஓட்டிகளிடம் பேசி இருக்கிறார். மக்களுக்காகக் களத்தில் இறங்கியுள்ள சசிகுமாரைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

More News >>