நாடு முழுவதும் 18,859 பேருக்கு கொரோனா பாதிப்பு.. பலி 590 ஆனது

இந்தியாவில் இன்றைய நிலவரப்படி 18,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.சீனாவிலிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் நோய், இந்தியாவிலும் பரவிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், குஜராத், டெல்லி, மேற்குவங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிகமாகப் பரவியிருக்கிறது.மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று(ஏப்.21) காலை வெளியிட்ட அறிக்கையின்படி, இந்தியாவில் மொத்தம் 18,859 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதில் 3251 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 15,200 பேருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனாவால் இது வரை பலியானவர்களின் எண்ணிக்கை 590 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் புதிதாக 1200 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் 466 பேருக்கும், குஜராத்தில் 196 பேருக்கும், ராஜஸ்தானில் 98 பேருக்கும், உத்தரப்பிரதேசத்தில் 95 பேருக்கும், மத்தியப் பிரதேசத்தில் 78 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

More News >>