பெப்சிக்கு கங்கனா ரூ 5 லட்சம் உதவி.. தலைவி பட ஊழியருக்கும் 5 லட்சம்..

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக உருவாகும் தலைவி படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கிறார். இப்படத்தை ஏ. எல். விஜய் டைரக்டு செய்கிறார்.கொரோனா ஊரடங்கு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் பெப்சி அமைப்பு மூலம் தொழிலாளர்களுக்கு நடிகர் நடிகைகள் உதவி வருகின்றனர். அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் பெப்சி அமைப்புக்கு ரூ 5 லட்சம் நிதி அளித்தார். அது தவிர தான் நடிக்கும் தலைவி பட குழுவில் உள்ள தின சம்பள ஊழியர்களுக்கும் 5லட்சம் நிதியுதவி அளித்தார்.

More News >>