கொரோனாவில் மொட்டை போட்ட நடிகை.. காரணம் இதுதான்..

இந்தியில் பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஜெயா பட்டச்சரியா. இவர் கொரோனா தொற்று காலத்தையொட்டி நீண்ட தனது அழகு கூந்தலை வெட்டி மொட்டை போட்டார். கொரோனாவுக்கும் கூந்தலுக்கும் என்ன சம்பந்தம், மொட்டை போட்டது ஏன் என்று அவரிடம் கேட்டதற்குப் பதில் அளித்தார்.

'கொரோனா தொற்று காலம் என்றாலும் அத்திவசிய தேவைகளுக்காக வெளியில் செல்ல வேண்டி இருக்கிறது. தவிர என்னுடைய வீட்டு நாய், தெருவில் உள்ள நாய்களுக்குத் தினமும் உணவு அளிக்கிறேன்.வெளியில் சென்று வந்தவுடன் தலை முதல் பாதம் வரை சோப்பு போட்டுக் குளிக்கிறேன். என் வீட்டில் உள்ளவர்கள் எல்லோருமே இப்படித்தான் நடைமுறை கடைப்பிடிக்கிறார்கள் ஒவ்வொருமுறை குளிக்கும் போதும் கூந்தல் இடையூறாக இருக்கிறது. எனவே மொட்டை போட முடிவு செய்து மொட்டை அடித்துக் கொண்டேன்.மொட்டை போட்டுக்கொண்டதால் இன்னும் எளிதாகச் சுதந்திரமாக எனது வேலைகளை அதிகம் செய்ய முடிகிறது ' என்றார்.

More News >>