செல்லங்களைக் கைவிடாதீர்கள் ராஷ்மி கோபிநாத் வேண்டுகோள்..

வைரஸ், காக்டெயில் படங்களில் நடித்திருப்பவர் ராஷ்மி கோபிநாத். இவர் கூறுகையில், கொரோனா தடை காலத்தில் ஓட்டல்கள் எல்லாம் மூடியிருக்கும் நிலையில் தெருவில் சுற்றித் திரியும் நாய்கள் ஒரு வேளை உணவு கூட கிடைக்காமல் பசியால் விடுகின்றன. பறவைகளும் தண்ணீர், உணவு கிடைக்காமல் தவிக்கின்றன. எனவே அவற்றிற்கு உணவு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதோடு வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளையும் கைவிடக் கூடாது. அவைகளால் எந்த நோயும் வருவது கிடையாது எல்லாவற்றையும் உணவு அளித்து நல்லபடியாகக் கவனிக்க வேண்டும்.

இவ்வாறு ராஷ்மி கோபிநாத் கூறினார்.

More News >>