சுவேதா பாசுவுக்கு மன நல சிகிச்சை..

நடிகை சுவேதா பாசு குழந்தைப் பருவத்திலேயே நடிக்க வந்தார். தமிழில் ஹீரோயினாக சந்தமாமா, ரா ரா படங்களில் நடித்தார். பின்னர் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்தார். தற்போது மும்பையில் வசிக்கிறார். கொரோனா தடை காரணமாக கடந்த 3 வாரத்துக்கும் மேலாகத் தனிமையில் இருந்தார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்டார். இதையடுத்து வீடியோ மூலம் டாக்டரை தொடர்பு கொண்டு மனநல சிகிச்சை பெற்றார்.

இதைப்பற்றிக் கூறும்போது, 'நான் தனிமையிலிருந்தது கிடையாது. குடும்பத்தினருடன் தான் இருந்திருக்கிறேன். திருமணத்துக்குப் பிறகு கணவருடன் இருந்தேன். அவரை பிரிந்து பிறகு மீண்டும் குடும்பத்துடன் தான் இருந்தேன். கொரோனா தொற்று தடை காலத்தில் தனிமையிலிருந்தேன். இதனால் மன தளவில் பாதிக்கப்பட்டேன். இதையடுத்து டாக்டரிடம் வீடியோவில் தொடர்பு கொண்டு ஆலோசனை மூலம் சிகிச்சை பெற்றேன்.

இவ்வாறு சுவேதா பாசு கூறினார்.

More News >>