அமலாபால் 2வது திருமணம் நடந்ததா? திடீர் விளக்கம்..

நடிகை அமலாபால் இயக்குனர் விஜய்யைக் காதலித்து மணந்தார். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். பின்னர் நடிப்பில் கவனம் செலுத்தத் தொடங்கியவர் ஆடை படத்தில் ஆடை அணியாமல் நடித்துப் பரபரப்பை ஏற்படுத்தினார். அடுத்து, 'அதோ அந்த பறவைபோல' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார். இதற்கிடையில் மும்பை பாடகர் பவிந்தர் சிங் என்பவரைக் காதலிப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் படங்கள் வெளியானது. இதையடுத்து அமலாபால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகத் தகவல் பரவியது. அதற்குப் பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வந்த அமலாபால் தற்போது அதுபற்றி பதில் அளித்திருக்கிறார்.

அவர் கூறியதாவது :'நான் ஒருவரைக் காதலிக்கிறேன். இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எனக்குத் திருமணம் நடந்ததா என்பது பற்றியும், எனது காதலன் யார் என்பதற்கான விளக்கம் நானே தருவேன். இதற்கிடையில் எனது திருமணம் பற்றி வதந்தியை யாரும் பரப்ப வேண்டாம். தற்போது நடித்து வரும் படத்தை முடித்த பிறகு திருமணம் பற்றி நானே அறிவிப்பேன்.

இவ்வாறு அமலாபால் கூறினார்.

More News >>