கடலில் கொரோனா இல்லையா? ராதிகா ஆப்தே சொல்வது சரியா?

நடிகை ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடலில் நடுவில் படகில் டூ பீஸ் நீச்சல் உடையுடன் இருக்கும் பல கவர்ச்சி படத்தை வெளியிட்டிருக்கிறார். அத்துடன், 'கொரோனா காலத்தில் தனிமைப்படுத்தலுக்குச் சரியான இடமாகத் தேர்வு செய்து வந்தேன். இந்த வாய்ப்பை நேசிக்கிறேன். நீச்சல் பிடிக்கும். கடலில் கொரோனா கிடையாது' எனத் தெரிவித்திருக்கிறார். ராதிகாவின் இந்த கருத்தைக் கேட்டு சிலர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். 'கொரோனா சீனாவில் முதலில் பரவிய போது கடல் பாம்பு மீன் வகையிலிருந்துதான் பரவியது எனத் தகவல் வெளியானது. நீங்கள் கடலில் கொரோனா இல்லை என்கிறீர்கள் . எதற்கும் எச்சரிக்கையாக இருங்கள்' எனத் தெரிவித்துள்ளனர்.

More News >>