சூர்யா ரசிகர்கள் உணவு சப்ளை.. கொரோனா ஊரடங்கால் உதவி..

வடசென்னை மாவட்ட சூர்யா நற்பணி இயக்கம் சார்பாக வட சென்னை மாவட்டத்தில் உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர், மாதவரம் திரு.வி.க நகர், மற்றும் தண்டையார்பேட்டை போன்ற தொகுதிகளில் கொரோனா லாக் டவுனால் வீடுகள் இல்லாமல் தெருவில் வசித்து வரும் நபர்களுக்குத் தினமும் 200 முதல் 250 நபர்களுக்குக் கடந்த 12 நாட்களாகத் தினமும் மதியம் சூர்யா மன்றத்தைச் சார்ந்த நண்பர்கள் ஹரி (மாவட்ட தலைவர் ) தலைமையில் உணவளித்து வருகிறார்கள்.மேலும் மே 3-ஆம் தேதி வரை தினமும் 200 முதல் 250 நபர்கள் வரை தெருவில் கஷ்டப்படும் நபர்களுக்கு உணவு அளிக்கப்படும் என்பதை தெரிவித்துள்ளார்கள்.இனி வரும் நாட்களில் இரவும் உணவு அளிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

More News >>