ஸ்ரீகாந்த் வீட்டு வெளியில் காத்திருக்கும் கொரோனா..

ரோஜாக்கூட்டம் ஸ்ரீ காந்த். இன்னமும் அதே இளமைத் துடிப்புடன் இருக்கிறார். இவர் தனது அம்மாவிடம் வெளியில் போவதாகச் சொல்லி கதவைத் திறந்து அடுத்த நொடியே கதவை மூடிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருந்து விடுகிறார். வீட்டுக்கு வெளியில் கொரோனா வைரஸ் காத்திருக்கிறது, என் வீட்டு வெளியில் மட்டுமல்ல எல்லோர் வீட்டு வெளியிலும் கொரோனா காத்திருக்கிறது வெளியில் சென்றால் நம்மைத் தாக்கும். ஒருவருக்குத் தொற்று பரவினால் அது மெல்ல மெல்லப் பலருக்குப் பரவிவிடும் எனவே பத்திரமாக வீட்டில் இருங்கள் என மக்களுக்கு அட்வைஸ் செய்திருக்கிறார். இதுவொரு விழிப்புணர்வு காணொளியாக உருவாகியிருக்கிறது.

More News >>