”நூறு வயசானாலும் நீ எனக்குக் குழந்தை தான்..” யாரைச் சொல்கிறார் சாய்பல்லவி?

நடிகை சாய்பல்லவி மலையாளத்தில் உருவான பிரேமம் படத்தில் அறிமுகமானாலும் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். மாரி 2 படத்தில் தனுஷுடன் இவர் சேர்ந்து ஆடிய ரவுடிபேபி பாடல் இணைய தளத்தைத் தெறிக்கவிட்டிருக்கிறது. சாய்பல்லவிக்கு பூஜா கண்ணன் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரது பிறந்தநாளில் தனது அன்பை வெளிப்படுத்தி கடிதம் எழுதி உள்ளார் சாய்பல்லவி.

அவர் எழுதிய கடிதம் வருமாறு:என் மீது நீ வைத்திருக்கும் அன்பு, எனக்காக நீ செய்த தியாகம். சமரசங்கள் என் வாழ்வை அர்த்தமுடையதாக்கி இருக்கிறது. என்னுடைய நடைமுறை வாழ்க்கையில் மகிழ்ச்சியை நீதான் கொண்டு வந்திருக்கிறாய். உன்னுடைய புன்சிரிப்பு இதெல்லாவற்றையும் உறுதி செய்கிறது. நீ என் வாழ்வில் இருப்பது எனக்கு ஆசீர்வாதம். உனக்கு நூறு வயதானாலும் நீ எனக்குக் குழந்தை தான். நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறேன் என்பதை நீ நானாக மாறிபார்த்தால் தான் தெரியும். நீ என் வாழ்வில் கிடைத்ததற்கு நான் எவ்வளவு அதிர்ஷ்டம் செய்திருக்கிறேன் என்பதைத் திரும்பவும் ஒரு முறை ஞாபகப்படுத்தும் நாள் இன்று”இவ்வாறு தனது தங்கை மீது பாசத்தை அள்ளிக்கொட்டி இருக்கிறார் சாய்பல்லவி.

More News >>