ரஜினிசாரின் கட்டளையை மீறி விட்டோம்.. இயக்குனர் பேரரசு வெளியிட்ட ரகசியம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் பெப்சி அமைப்புக்கு ரூ 50 லட்சம் நன்கொடை அளித்தார். திரைப்பட இயக்குனர்கள் சங்கத்துக்கு அரிசி, மளிகை சாமான்கள் அளித்தார். இதுபற்றி பத்திரிக்கை செய்தி தர வேண்டாம் என்று கேட்டுக் கொண்டாராம். ஆனால் அதையும் மீறி ரஜினி செய்த உதவி பற்றி இயக்குனர் பேரரசு தெரிவித்திருக்கிறார்.

இதுபற்றி அவர் தனது டிவிட்டர் பக்கத்தில்.ரஜினிசாரின் கட்டளையை மீறிவிட்டோம். இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மூட்டை. மளிகை பொருட்கள் வழங்கும்போது பத்திரிகைகளை அழைக்கவோ, செய்தி கொடுக்கவோ வேண்டாம் என்ற நிபந்தனையோடு தான் கொடுத்தார். அது அவரின் பெருந்தன்மையாக இருக்கலாம் பெற்ற உதவியை நாங்கள் எப்படிச் சொல்லாதிருப்பது எனத் தெரிவித்திருக்கிறார் இயக்குனர் பேரரசு.

More News >>