நடிகை ஜோதிர்மய் திடீர் மொட்டை.. படத்தைப் பகிர்ந்து கணவர் சொன்ன மந்திரம்..

தலைநகரம், நான் அவனில்லை, சபரி, பெரியார் போன்ற தமிழ் மற்றும் பல்வேறு மலையாள படங்களில் நடித்திருப்பவர் ஜோதிர்மய். இவர் கடந்த 2015ம் ஆண்டு மலையாள இயக்குனர், ஒளிப்பதிவாளர் அமல் நீரட் என்பவரை மணந்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பதைக் கைவிட்டார் ஜோதிர்மய். இணைய தள பக்கத்தில் இருவரும் இணைந்திருந்தாலும் தங்களது பர்சனல் புகைப்படங்களை அவர்கள் பகிர்வதில்லை.

கொரொனா லாக்டவுன் நாளில் தன்னை எளிமையாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதால் திடீரென்று ஜோதிர்மய் தலையை மொட்டை அடித்துக்கொண்டார். அந்த புகைப்படத்தை அவரது கணவர் நீரட் தனது டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். அத்துடன் ஏதோ மந்திரம் சொல்வதுபோல், தமசோமா ஜோதிர்கமயஎனத் தெரித்திருக்கிறார்.

More News >>