நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு ரஜினி உதவி.. நாளை 25ம் தேதி பெறலாம்..

நடிகர் சங்க உறுப்பினர்கள் 1000 பேருக்கு ரஜினிகாந்த் நிவாரண பொருட்கள் வழங்குகிறார்.இதுபற்றி நடிகர் சங்க தனி அதிகாரி கூறியிருப்பதாவது :அன்பார்ந்த தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் கவனத்திற்கு, உலகம் முழுவதும் கொரானோ வைரஸ் பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது. இதனால் திரைப்படத்துறை சார்ந்த அனைத்து தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழ்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

இச்சூழ்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க 1000 உறுப்பினர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நிவாரண பொருட்களை வழங்கி உள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந் துக்கு தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்கள் சார் பாக மிகுந்த நன்றியினையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.நிவாரண பொருட்களை 25.04.2020 அன்று சாலிகிராமத்தில் அமைந்துள்ள செந்தில் ஸ்டூடியோ வளாகத்தில் காலை 6.00 மணி முதல் காலை 8.00 மணி வரை உறுப்பினர்கள் தங்களுடைய தென்னிந்திய நடிகர் சங்க அடையாள அட்டையுடன் நேரில் வருகை தந்து பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தனித்திரு! விழித்திரு! விலகி இரு! உறுப்பினர்கள் முக கவசம் கண்டிப்பாக அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்க தனி அதிகாரி தெரிவித்துள்ளார்.

More News >>