உலகம் பெண் வில்லனைப் பார்க்கப்போகிறது.. சூர்யா இயக்குனர் பயமுறுத்தல்..

சர்ச்சை இயக்குனர் ராம்கோபால் வர்மா இதுவரை பிரபலங்களை வம்புக்கு இழுத்து வந்தார். இம்முறை உலக நாடுகளைப் பயமுறுத்தும் வேலையை ஆரம்பித்திருக்கிறார்.அவர் கூறியிருப்பதாவது வட கொரியா அதிபர் கிம் ஜாங் யூனுக்கு பிறகு அந்த இடத்தை அவரது தங்கை பிடிப்பார். இவர் கிம் ஜாங்கைவிட சர்வாதிகாரமாக செயல்படக் கூடியவர். உலகம் முதன்முறையாக ஒரு பெண் வில்லனைப் பார்க்கப்போகிறது. ஜேம்ஸ் பாண்டு படங்களில் பார்க்கும் பெண் வில்லன் நிஜத்தில் வரப்போகிறார் என்றார்.

ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்திரம் படம் உள்பட பல்வேறு தெலுங்கு, இந்தி படங்களை இயக்கி உள்ளார். வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபத்தில் இருதய அறுவை சிகிச்சை செய்த போது அவரது உடல் நிலை மோசம் அடைந்ததாகக் கூறப்பட்டது. அவர் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்ற சந்தேகம் பல நாடுகளுக்கு எழுந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>