கங்கனா ரனாவத் மீது போலீஸில் புகார்..

நடிகை கங்கனா ரனாவத் மீது அலி காஷிஃப் கான் தேஷ்முக் என்ற மும்பை வழக்கறிஞர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். அதில் கூறியிருப்பதாவது :கங்கனா ரனாவத் சகோதரி ரங்கோலி சிறுபான்மையினர் மீது தவறான கருத்தைப் பரப்பி அவர்களைத் தாக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்பது போல் கருத்தை டிவிட்டரில் பகிர்ந்தார். இதையடுத்து அவரது டிவிட்டர் கணக்கைத் தற்காலிகமாக முடக்கினர். அதை நிரந்தரமாகத் தடை செய்யவேண்டும். தனது சகோதரி சொன்ன கருத்துக்கு ஆதரவு தெரிவித்து ரங்கோலி தவறாக எதுவும் சொல்லவில்லை என்று கங்கனா ரனாவத் ஆதரவு தெரிவித்துள்ளார். தனது ஸ்டார் அந்தஸ்து, அதிகார பலம், பணபலம் ரசிகர்கள் ஆதரவை கங்கனா தவறாகப் பயன்படுத்தியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்.கங்கனா ரானாவத் தற்போது தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை கதையாக உருவாகும் தலைவி படத்தில் நடித்து வருகிறார்.

More News >>