செல்வராகவனின் பொய் சந்தோஷம்.. தத்துவம் பேசும் இயக்குனர்..

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படம் கடந்த ஆண்டு திரைக்கு வந்தது. இதையடுத்து தனுஷ் நடிக்கும் புதுப்பேட்டைப் படத்தின் 2ம் பாகம் இயக்க ஸ்கிரிப்ட் ரெடி செய்து வருகிறார். செல்வராகவன் இணைய தள பக்கத்தில் ஆர்வமாகப் பதிவுகள் வெளியிடுவது வழக்கம். அவரது பதிவில் தத்துவங்கள் அதிகம் இருக்கும். அவர் நேற்று வெளியிட்ட பதிவில் கூறும்போது,'வாழ்க்கையில் இரண்டு விஷயங்கள் உள்ளது. சந்தோஷமாக இருப்பது, சோகமாக இருப்பது. நீங்கள் சந்தோஷத்தைத் தேர்வு செய்யுங்கள். நிஜத்தில் அது இருக்காவிட்டாலும் பொய்யாகவாவது சந்தோஷமாக மூன்று நாட்கள் இருங்கள். பின்னர் அதுவே உங்களுக்கு வழக்கமான சந்தோஷமாக மாறும். அது பொய்யான விஷயம் என்பதும் மறந்து போகும். இதை அனுபவ ரீதியாகச் சொல்கிறேன்.' எனத் தெரிவித்திருக்கிறார்.

More News >>