மேடை நடனக் கலைஞர்கள் பசியை போக்குங்கள்.. முதல்வருக்கு மன்சூர் கோரிக்கை..

மேடை நடனக் கலைஞர்களுக்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை தமிழக அரசு வழங்க வேண்டும், என்று நடிகரும் தயாரிப்பாளர், இயக்குனருமான மன்சூரலிகான், கோரிக்கை வைத்துள்ளார்.இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்பதாவது:கொரோனா காலத்தில் திறம்படச் செயல்பட்டு வரும் தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு என் பாராட்டுகளும், நன்றிகளும்.

தமிழகம் முழுவதும் சுமார் 2 லட்சத்திற்கும் மேலான மேடை நடனக் கலைஞர்கள் இருக்கிறார்கள். தற்போதைய ஊரடங்கினால், இவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பதோடு, உணவுக்கே வழியின்றி தவித்து வருகிறார்கள். இவர்கள் மட்டும் அல்லாமல், மேடை நாடக நடிகர்கள், சினிமா துணை நடிகர்கள் உள்ளிட்ட சினிமா துறையில் உள்ள தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழக அரசு பொது மக்களுக்கும் மற்றும் கூலித் தொழிலாளர்களுக்கு வழங்கும் நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்கள் போல, மேடை நடனக் கலைஞர்கள் மற்றும் துணை நடிகர்களுக்கும் வழங்க வேண்டும், என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்

More News >>