ஜெயலலிதா நல்லதும் கெட்டதும் செய்து இருக்கிறார்: திருநாவுக்கரசர் அதிரடி

ஜெயலலிதா முதல்வராக இருந்த போது நல்லதும் செய்து இருக்கிறார்; கெட்டதும் செய்து இருக்கிறார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

இது குறித்து சென்னை பெரவள்ளூர் சதுக்கத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய திருநாவுக்கரசர், “தமிழ்நாட்டின் தலைவிதி மாற்றி எழுதபட வேண்டுமானால் ஆட்சி மாற்றம் என்பது அவசியமாக உள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நல்லது செய்து இருக்கிறார். கெட்டதும் செய்து இருக்கிறார்.

ஆனாலும் அவர் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு அச்சுறுத்தலாகவே இருந்தார். ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை. தெலுங்கு தேச எம்.பி.க்கள் ராஜினாமா மிரட்டல் விடுக்கிறார்கள். அது மாதிரியான நிலைமை தமிழகத்தில் இல்லை.

தெலுங்கு தேச எம்.பி.க்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கூண்டோடு ராஜினாமா செய்வோம் என்று மத்திய அரசுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள். அதுபோல தமிழகத்திலும் செய்யலாம். ஆனால் அப்படி மிரட்ட தயங்குகிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் தான் தமிழக நலன் பாதுகாக்கப்படும்” என்றார்.

More News >>