சென்னையில் எந்த பகுதியில் கொரோனா பாதிப்பு அதிகம்..

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இது மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1755ல் இருந்து 1821 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒருவர் பலியானதால், கொரோனா சாவு எண்ணிக்கை 23 ஆனது.சென்னையில்தான் கொரோனா பரவல், சமூக பரவலாகி மாறியிருக்கிறது. நேற்றும் சென்னையில் 66 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்களுக்கு கொரோனா நோயாளியுடன் ஏற்பட்ட தொடர்பில்தான் நோய் பரவியிருக்கிறது. சென்னையில் மட்டும் இது வரை கொரோனா பாதிப்பு 495 ஆகியுள்ளது.

அதிகபட்சமாக, ராயபுரம் மண்டலத்தில் 137 பேர், திரு.வி.க.நகர் 80, தண்டையார்பேட்டை 64, தேனாம்பேட்டை 54, கோடம்பாக்கம் 53, அண்ணாநகர் 43, திருவொற்றியூர் 14, வளசரவாக்கம் 14, அடையார் 10, ஆலந்தூர் 9, பெருங்குடி 8, மாதவரம் 3 சோழிங்கநல்லூர் 2 பேர் என்று கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

More News >>