தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1885 ஆக உயர்வு.. பலி 24 ஆனது

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1885 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும் 523 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் 6 சிறுவர்களும் அடங்குவர். இதையடுத்து, கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1821ல் இருந்து 1885 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1020 பேர் குணம் அடைந்துள்ளனர். நேற்று ஒருவர் பலியானதால் சாவு எண்ணிக்கை 24 ஆனது.

சென்னை தான் இன்னமும் கொரோனா நோயின் ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது. நேற்று புதிதாக 28 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 523 ஆனது. கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, மதுரை 75, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 59, செங்கல்பட்டு 58, தஞ்சை 55, திருவள்ளூர் 53, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>