ஒரு பிரபலமாக இருப்பது சுமை அளிக்கிறது- மனம் திறக்கும் ஓவியா!

"பிரபலமானவளாக இருப்பது கூடுதல் அழுத்தம் தருகிறது" என பிக்பாஸ் ஓவியா மனம் திறந்துள்ளார்.

சமீபத்தில் தனியார் நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஓவியா, "ஒரு நட்சத்திரமாக பிரபலமடைந்து இருப்பது கூடுதல் சுமைதான். மக்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்களுக்கு ஒரு திரை நட்சத்திரத்தைப் பிடித்திருந்தால் அவரை உற்சாகம் அளித்து ஊக்கப்படுத்துங்கள். அதைவிடுத்து ஒருவரைக் கேலி செய்வது சமூக வலைதளங்களில் மோசமாக விமர்சிப்பது கூடாது. அது தவறானதும் கூட" என்றார்.

மேலும் அவர் பகிர்கையில், "பிரபலமான திஐ நட்சத்திரமாகைருந்தாலும் நாங்களும் மனிதர்கள்தான் என உணர வேண்டும். நான் பிரபலமடைந்து இருப்பது கூடுதல் அழுத்தமாக உள்ளது. எப்போதும் எல்லோரும் உங்களையே பார்த்துக்கொண்டிருப்பது போலவே இருக்கும். சாதாரணமான வாழ்க்கையே வாழ முடியாது. என்னுடைய 'நடிகை' என்ற கூடுதல் இணைப்பு இல்லாமல் இருக்கவே நான் விரும்புகிறேன்" எனக் கூறினார்.

More News >>