அரசு ஊழியர்களுக்கு டி.ஏ, ஈட்டிய விடுப்பு ரத்து..

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி(டி.ஏ.) உயர்வை, அடுத்தாண்டு ஜூன் வரை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஈட்டிய விடுப்பு சம்பளமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.நாடு முழுவதும் கொரோனா பரவியிருக்கிறது. இந்நிலையில், கொரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரணப் பணிகளுக்கு அதிக நிதி தேவைப்படுவதால், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்தி வைத்து மோடி அரசு கடந்த 2 தினங்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை டி.ஏ. உயர்வு வழங்கப்படும். அப்படி வழங்கப்படும் போதெல்லாம் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அதே சதவீதம் உயர்வு வழங்கப்படுவதுண்டு. இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூன் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டதை அடுத்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தையும் ஓராண்டுக்குத் தராமல் நிறுத்தி வைக்கவும் அரசு உத்தரவிட்டிருக்கிறது.

More News >>