சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. 570 பேருக்கு தொற்று உறுதி

சென்னையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இன்று 47 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் மட்டும் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 570 ஆனது.தமிழகம் முழுவதும் நேற்று(ஏப்.26) 64 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1885 ஆக இருந்தது. இன்று(ஏப்.27) மாலை தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையின்படி, மாநிலம் முழுவதும் புதிதாக 52 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து, கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 1937 ஆக உயர்ந்துள்ளது. இதில் 132 பேர் பெண்கள், 625 பேர் ஆண்கள்.

சென்னையில் தான் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவிக் கொண்டிருக்கிறது. இன்று புதிதாக 47 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 570 ஆனது. இது தவிர மதுரையில் புதிதாக 4 பேருக்கும், விழுப்புரத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.கோவையில் 141, திருப்பூர் 112, திண்டுக்கல் 80, ஈரோடு 70, நெல்லை 63, நாமக்கல் 59, செங்கல்பட்டு 58, தஞ்சை 55, திருவள்ளூர் 53, திருச்சி 51 பேர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>