மாங்காய் விற்கும் பிரகாஷ்ராஜ் மகன்..

பிரபல நடிகர், அரசியல்வாதி பிரகாஷ்ராஜ் படங்களில் வில்லனாக நடித்தாலும் நிஜத்தில் ஹீரோவாக தனது சமூக பணிகளையாற்றி வருகிறார். வெறுப்பு பேச்சுக்களுக்குப் பதிலடி கொடுத்து வரும் அவர் அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். கொரோனா லாக்டவுனில் தனது பணியாளர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை அளித்ததுடன் ஏழை எளியவர்களுக்கு உதவி வருகிறார்.

இதுபற்றி அவர் கூறும்போது. உதவி செய்யும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லையென்றாலும் கடன் வாங்கியாவது உதவுவேன். பணத்தை பிறகுகூட சம்பாதித்துக் கொள்ளலாம். மனிதநேயம் என்பது வாழ்வில் முக்கியம். இந்த கடினமான தருணத்தில் அனைவரும் இணைந்து போராடுவோம். தற்போது எனது மகன் (வேதாந்த்).. மாங்காய் வியாபாரி.. பண்ணையில் இயற்கையுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கிறான். எல்லோரும் வீட்டில் இருங்கள், பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும் எனத் தெரிவித்திருக்கிறார் பிரகாஷ்ராஜ்.

More News >>