ஆஸ்கர் விழாவில் ஶ்ரீதேவிக்கு நினைவஞ்சலி!

இந்திய திரை துறையில் 50 ஆண்டுகள் கோலோச்சிய தலைசிறந்த நடிகையாகக் கருதப்படுபவர் ஸ்ரீதேவி. கடந்த சில நாள்களுக்கு முன்னர் யாரும் எதிர்பாராத வகையில் துபாயில் காலமானார். ஸ்ரீதேவியின் இறப்புக்கு அவரது ரசிகர்களும் குடும்பத்தாரும் இன்னும் பல்வேறு வகைகளில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில், 90-வது ஆஸ்கர் விருதுகள் துவக்க விழா லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நேற்று நட‍ந்த‍து. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விழாவின் போது, அதற்கு முந்தைய ஆண்டு மறைந்த உலகப் புகழ்பெற்ற நடிகர்களை நினைவு கூறுவது வழக்கம். இந்த வகையில் நேற்றைய விழாவிலும் நினைவு கூறல் நிகழ்வு இடம்பெற்றது. அப்போது நடிகை ஸ்ரீதேவி, சசி கபூர் ஆகிய இந்திய நட்சத்திரங்கள் நினைவு கூறப்பட்டனர். ஸ்ரீதேவி ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கவில்லை என்றாலும், உலக அளவில் புகழ் பெற்றவராக விளங்கினார். ச‍சி கபூர் பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்த‍க்கது.
More News >>