இரட்டைக் குழந்தைகளுக்குத் தாயான சன்னி லியோன்!

ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வரும் சன்னி லியோன் குடும்பத்தில் புதிதாக இரட்டை ஆண் குழந்தைகள் இணைந்துள்ளனர்.

சன்னி லியோன்- டேனியல் வெப்பர் தம்பதியினர் கலிபோர்னியாவில் தற்போது வசித்து வருகின்றனர். தங்கள் குடும்பத்தை முழுமை அடையச் செய்ய விரும்பிய இத்தம்பதியினர் சில ஆண்டுகளுக்கு முன்னர் மஹாராஷ்திராவைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். மேலும் சன்னி லியோன் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் வேண்டும் என்ற ஆசை இருந்ததாகக் கூறுகின்றனர்.

இதையடுத்து இன்று சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய குடும்பத்தை மேலும் முழுமையாக்க இரட்டை ஆண் குழந்தைகள் இணைந்துள்ளதாகக் கூறியுள்ளார். மூத்த மகள் நிஷா, இரட்டை மகன்கள் நோவா மற்றும் அஷர் ஆகியோருடன் சன்னி லியோன்- டேனியல் வெப்பர் தம்பதியினர் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது சர்வதேச வைரல் லிஸ்டில் இடம்பெற்றுள்ளது.

மூத்த மகள் தத்தெடுக்கப்பட்டவர் என்பதை முன்னரே அறிவித்திருந்த சன்னி லியோன், இதுவரையில் இரட்டைக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்ட குழ்ந்தைகளா அல்லது வளர்ப்புத் தாய் மூலம் பெற்ற பிள்ளைகளா என்பதை அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>