பிரபல நடிகர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி..

பிரபல இந்தி நடிகர் இர்பான் கான். ஹாலிவுட்டில் ஆஸ்கர் விருதினை வென்ற லைப் ஆப் பய் ஆங்கில படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2018ம் ஆண்டு இவருக்கு மூளையில் கேன்சர் கட்டி ஏற்பட்டது. இதையடுத்து அவர் லண்டன் மருத்துவமணையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஒரு வருட சிகிச்சைக்கு பிறகு அவர் மும்பை திரும்பியதுடன் ஆங்கிரிஸி மீடியம் என்ற படத்திலும் நடித்தார்.

இந்நிலையில் நேற்று இர்பானுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அணுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் உள்ள அவரை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.இதற்கிடையில் கடந்த சில தினங்களுக்கு முன் இர்பான் தாயார் அவரது சொந்த ஊரில் மரணம் அடைந்தார் . கொரோனா ஊரடங்கால் தாயார் இறுதி சடங்கில் நேரில் பங்கேற்க முடியவில்லை. வீடியோ மூலமே இறுதி சடங்குகளை கண்டு கண் கலங்கி இறுதி அஞ்சலி செலுத்தினார் இர்பான் கான்.

More News >>