ஜோதிகா படத்தைத் தொடர்ந்து ஒடிடி தளத்தில் வெங்கட் பிரபு படம் ரிலீஸ்..

ஜோதிகா நடிக்க சூர்யா தயாரித்த பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸாகிறது. இதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தியேட்டரில் படத்தை ரிலீஸ் செய்த பிறகே ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் வெங்கட்பிரபு தான் தயாரித்துள்ள ஆர்கே நகர் என்ற படத்தை ஒடிடி தளத்தில் வெளியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். இப்படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் தேர்தல் காரணமாகப் பட ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வடகறி படத்தை இயக்கிய சரவண ராஜன் ஆர்கே நகர் படத்தை இயக்கி உள்ளார்.

இப்படம் கடந்த ஆண்டு நெட் பிளிக்ஸில் வெளியானது. எதிர்ப்பு காரணமாக அப்படம் உடனடியாக அதிலிருந்து நீக்கப்பட்டது.தற்போது ஒடிடி தளத்தில் ஆர்கே நகர் ரிலீஸ் ஆகிறது என்று வெங்கட்பிரபு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆர்.கே நகர் படத்தில் வைபவ், சனா அல்டாப், சம்பத் நடித்திருக்கின்றனர். பிரேம்ஜி இசை அமைத்திருக்கிறார்.

More News >>