டெல்லி நம்மை ஏன் மதிக்கவில்லை? - பழ.நெடுமாறன்

ஆளும்கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவரும் எதிரும் புதிருமாக போட்டி அரசியல் நடத்தியதன் காரணமாக டெல்லி நம்மை மதிக்கவில்லை என்று தமிழர் தேசிய. முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து நெடுமாறன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அலர்களுடன் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்களும் காவிரி பிரச்சனை தொடர்பாக சந்தித்துப் பேசியதை வரவேற்றுப் பாராட்டுகிறேன்.

கடந்த 50 ஆண்டு காலத்தில் தமிழக ஆளும் கட்சித் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவரும் எதிரும் புதிருமாக போட்டி அரசியல் நடத்தியதன் காரணமாக தமிழக பிரச்சனைகளுக்கு ஒன்றுபட்டத் தீர்வினைக் காண முடியாமல் போயிற்று. டெல்லியும் நம்மை மதிக்கவில்லை.

கடந்தகால வெறுப்பு உணர்வு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள அரசியல் எல்லைக் கோடுகளை தாண்டிய உறவு மேலும் வளருமாக” என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

More News >>