ராயபுரம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு தீவிரம்..

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. நேற்று மட்டும் இம்மண்டலத்தில் 25 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.தமிழகத்தில் நேற்று(ஏப்.30) மாலை நிலவரப்படி, 2162 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இது வரை சென்னையில்தான் அதிகபட்சமாக 768 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருக்கிறது. நேற்று ஒரே நாளில் திரு.வி.க.நகர் மண்டலத்தில் 41 பேருக்கும், ராயபுரம் மண்டலத்தில் 25 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில் 189 பேருக்கும், திரு.வி.க.நகர் 169, தேனாம்பேட்டை 85, தண்டையார்பேட்டை 77, அண்ணாநகர் 73, கோடம்பாக்கம் 63, வளசரவாக்கம் 30, அடையார் 19, திருவொற்றியூர் 16, ஆலந்தூர் 9, பெருங்குடி 9, மாதவரம் 4, சோழிங்கநல்லூர் 2, மணலி மண்டலத்தில் ஒருவர் என்று கொரோனா பாதித்துள்ளது.

More News >>