1400 கிலோ மீட்டர் சாலை வழியாக தந்தை ரிஷிகபூருக்கு அஞ்சலி செலுத்த வரும் மகள்.. கொரோனா ஊரடங்கால் தவிப்பு..

பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் (67). இன்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு ஜனாதிபதி. பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரித்திருக்கின்றனர். ரிஷி கபூரின் மகள் ரித்திமா கபூர் தொழிலதிபரை மணந்துகொண்டு டெல்லியில் வசிக்கிறார். தந்தையின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தார். தந்தைக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக அவர் டெல்லியிலிருந்து மும்பை வர இயலாத சூழல் அமைந்துள்ளது.

கொரானா ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதும் லாக்டவுன் அமலில் உள்ளதால் மும்பைக்கு விமானத்தில் செல்ல மத்திய உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டார். அவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவருடன் உறவினர்களும் வர வேண்டி இருந்ததால் டெல்லியிலிருந்து 1400 கிலோ மீட்டர் தூரம் சாலை வழியாக காரில் புறப்பட முடிவுசெய்தார். அதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியிருக்கிறது, இதையடுத்து அவர் காரில் டெல்லியிலிருந்து மும்பைக்குப் புறப்பட்டார். அவர் மும்பை வந்து சேர 18 மணிநேரம் ஆகும். எனவே ரிஷுகபூர் இறுதிச் சடங்கு அவர் வந்த பிறகே நடத்த குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

More News >>