கொரொனா ஊரடங்கால் ரிஷிகபூர் இறுதி சடங்கில் பங்கேற்க முடியாத மகள்.. மகளுக்காகக் காத்திருக்காமல் உடல் தகனம் நடந்தது..

பிரபல இந்தி நடிகர் ரிஷிகபூர் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 67. இவரது மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நடிகர், நடிகைகள் இரங்கல் தெரிவித்தனர். ரிஷியின் மகள் ரித்திம்மா திருமணம் ஆகி டெல்லியில் வசிக்கிறார். கொரோனா ஊரடங்கால் அவர் உடனடியாக விமானத்தில் புறப்பட்டு மும்பை வரமுடியாத நிலை இருந்தது. எனவே டெல்லியிலிருந்து 1400 கி.மீ தூரம் காரில் வந்து தந்தை இறுதிச் சடங்கில் பங்கேற்க முடிவு செய்தார். அவருக்கு மத்திய அரசு சிறப்பு அனுமதி வழங்கியது. அவர் வருவது தாமதம் ஆனதால் ரிஷியின் உடலை நேற்றே தகனம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி மும்பை சந்தன் வாடி சுடுகாட்டில் உடல் தகனம் செய்யப்பட்டது.

இறுதிச் சடங்கில் ரிஷிகபூர் மனைவி நீட்டு கபூர், மகன் ரன்பீர் கபூர், சகோதரர் ரந்திர் கபூர். சயீப் அலிகான். கரீனா கபூர். அலிபாட். அபிஷேக் பச்சன், தொழில் அதிபர் அனில் அம்பானி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

More News >>