ரஜினி கமல் விஜய் அஜீத் சூர்யாவிடம் உதவி கேட்கும் ராகவா லாரன்ஸ்..

கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கொரோனாவை கட்டுப்படுத்தியதோ இல்லையோ மக்களை வீட்டில் முடக்கிவைத்து வருமானம் இன்றி தவிக்கவிட்டிருக்கிறது. திரையுலக தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கு உதவ நடிகர், நடிகைகள் நிதியுதவி அளித்துள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் 3கோடி ரூபாய்க்கு மேல் நிதி மற்றும் பொருளுதவி அளித்திருக்கிறார். தற்போது அவர் ரஜினி, கமல், விஜய் அஜீத், சூர்யாவிடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்திருக்கிறார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இந்த கஷ்டமான சூழ்நிலையில் பலர் உதவி கேட்டு என்னைத் தொடர்பு கொண்டு வருகின்றனர். அவர்கள் கேட்பது பணம் அல்ல, உணவுக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே. என்னால் முடிந்தளவு நானும் உதவிகள் செய்து வருகிறேன். என் ஒருவனால் மட்டுமே அனைவருக்கும் உதவி செய்திட முடியாது. இதுகுறித்து என் தம்பியிடம் பேசிய போது, இந்த முயற்சியில் இன்னும் பலரைச் சேர அழைக்கலாம் எனக் கூறினார். இதுகுறித்து எனது குரு ரஜினிசார்டம் பேச, அவர் 100 மூட்டை அரிசிகளை அனுப்பி வைத்தார். இதையடுத்து இந்த முயற்சியில் கைகோர்க்க நான் அழைப்பு விடுக்கிறேன். நடிகர்கள் கமல், விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நட்சத்திரங்களும் அவர்களின் ரசிகர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்கள் என உதவ விருப்பமிருப்பவர்கள் அனைவரும், இந்த முயற்சியில் இணையுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்.நாங்கள் நிதி கேட்கவில்லை, அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மட்டும்போதும். அதை அனுப்பி வைத்தால், நாங்கள் உரியவர்களிடம் சேர்க்கும் வேலையைப் பார்த்துக் கொள்கிறோம்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் கூறி உள்ளார்.

More News >>