மருதநாயகம் படத்தில் நான் நடிக்க முடியாது.. கமல் கொடுக்கும் ஷாக்..

கமல்ஹாசன் நீண்ட நாள் கனவாக அமைந்திருந்த படம் மருதநாயகம். கடந்த 1997ம் ஆண்டு இங்கிலாந்து ராணி சென்னை வந்தபோது இப்படத்தைத் தொடங்கி வைத்தார். அதன் படப்பிடிப்பில் கமல் கலந்து கொண்டு நடித்தார். ஆனால் பைனான்ஸ் பிரச்சனை காரணமாகத் தொடர முடியாமல் நின்றுபோனது.

மீண்டும் அப்படம் தொடங்கப்படுமா என்றதற்கு அதிர்ச்சியான பதில் அளித்தார் கமல். அவர் கூறும்போது, 'மருதநாயகம் படம் 40வயது நடிகர் நடிக்க வேண்டிய படம். பைனான்ஸ் பற்றாக்குறையால் நின்று போனது. இப்போது பைனான்ஸ் கிடைத்தாலும் நான் நடிக்க முடியாது. இப்போது எனக்கு வயது கடந்துவிட்டது. நான் நடிக்க வேண்டுமென்றால் ஸ்க்ரிப்ட்டை மீண்டும் மாற்றி எழுத வேண்டும் அல்லது 40வயதில் உள்ள வேறு நடிகர் நடிக்க வேண்டும்' என்றார் கமல்.

More News >>