தமிழகத்தில் திருநங்கை ஒருவருக்கு கொரோனா..

தமிழகத்தில் முதல் முறையாக திருநங்கை ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தினமும் 200க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று ஒரே நாளில் 231 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இந்த 231 பேரில் 158 ஆண்கள், 72 பெண்கள் மற்றும் ஒருவர் திருநங்கை ஆவார்.குழந்தைகள், டாக்டர்கள் உள்ளிட்டோருக்கும் கொரோனா பாதித்த போதிலும், திருநங்கைகளுக்கு கொரோனா பரவாமல் இருந்தது. தற்போது முதல் முறையாக ஒரு திருநங்கைக்கு கொரோனா பாதித்திருக்கிறது. தமிழத்தில் தற்போதைய நிலவரப்படி 1828 ஆண்கள், 928 பெண்கள் மற்றும் ஒரு திருநங்கை என்று மொத்தம் 2757 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது.

More News >>