வீட்டு செல்லங்களை பாதுகாக்க சவால் விடும் நடிகை.. கவர்ச்சி உடையில் லக லக..

கொரோனா ஊரடங்கில் பல நடிகர், நடிகைகள் வீட்டு வேலை செய்வது முதல், உடற்பயிற்சி செய்வது வரை பல்வேறு சவால்களை சக நட்சத்திரங்களுக்கு விடுத்து வருகின்றனர். அதேசமயம் நாய் போன்ற செல்ல பிராணிகளிடமிருந்து கொரோனா பரவும் என வாட்ஸ் ஆப்பில் வந்த தகவலை கண்ட பலர் தங்கள் வீட்டில் வளர்த்த நாய்களை கைவிடத் தொடங்கினர். நாய்களிடமிருந்து கொரோனா பரவாது அவற்றை கைவிடாமல் உணவளித்து பராமரிக்க வேண்டும் என்று ஒன்றுக்கு இரண்டுமுறை வீடியோவில் தோன்றி கோரிக்கை விடுத்தார் வரலட்சுமி சரத். தற்போது மற்றொரு நடிகை நாய்களை கைவிடாதீர்கள் எனக் கேட்டிருக்கிறார்.

தெலுங்கில் மகேஷ்பாபு நடித்த 1நேனொகடய்னே என்ற படத்தில் நடித்தவர் கிரித்தி சனோன். இந்தியில் பல படங்களில் நடித்துள்ளார். காலையில் எழுந்த அவர் தனது வீட்டு ஷோபாவில் ஜன்னல் அருகே அமர்ந்து இரண்டு செல்ல நாய்குட்டிகளில் ஒன்றை தன் மடியிலும் மற்றொன்றை தன் அருகிலும் அமர்த்திக் கொண்டு காலை வெயிலில் இதமாக இளைப்பாறியபடி, உங்கள் வீட்டு செல்லபிராணிகளிடமும் அன்பு காட்டுங்கள், கைவிடாதீர்கள் என கூறியிருக்கிறார்.

More News >>