வட இந்திய ரசிகர்களின் கோரிக்கையை ஏற்பாரா ராஜமவுலி.. ராமாயண காவியம் உருவாகுமா?

பாகுபலி படத்துக்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி இயக்கத்தில் தென்னிந்திய நடிகர்கள் மட்டுமல்லாமல் வட இந்திய நடிகர்களும் நடிக்கக் காத்திருக்கின்றனர். அதேபோல் வட இந்திய ரசிகர்களும் அவரது ரசிகர்களாகி விட்டனர். இந்நிலையில் நேற்று வட இந்திய ரசிகர்கள் பலர் ராஜமவுலி பெயரில் ஹேஷ்டேக் உருவாக்கி ராமாயணம் புராண காவியத்தை இயக்கும்படி கேட்டுள்ளனர். ஏற்கனவே மகாபாரதம் காவியத்தை படமாக இயக்குவது தனது லட்சியம் என்று ராஜமவுலி கூறியிருக்கிறார்.

தற்போதைக்கு ராம்சரண். ஜுனிஅர் எண்டிஆர் நடிக்கும் ஆர் ஆர் ஆர் என்ற படத்தை இயக்கி வரும் ராஜமவுலி அடுத்து மகேஷ்பாபு நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். அதற்கு இரண்டிலிருந்து மூன்று வருடம் அவகாசம் தேவை என்று அவரது தரப்பில் கூறப்படுகிறது. அதன் பிறகாவது ராஜமவுலி தங்களின் ஆசையை நிறைவேற்றுவாரா என வட இந்திய ரசிகர்களின் கோரி உள்ளனர்.

More News >>