சென்னையில் வேகமாக பரவும் கொரோனா.. 750 மண்டபங்களில் படுக்கைகள் தயார்..

சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 203 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதையடுத்து, 750 திருமண மண்டபங்களில் படுக்கை வசதிகள் தயார் செய்யப்பட்டுள்ளன.தமிழகத்தில் நேற்று மாலை வரை 3023 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மட்டும் 203 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது. சென்னை முழுக்க 1458 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.

அதிகபட்சமாக, திரு.வி.க. நகர் மண்டலத்தில் 324 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ராயபுரம் 275, கோடம்பாக்கம் 199, தேனாம்பேட்டை 166, அண்ணாநகர் 130, அம்பத்தூர் 58, தண்டையார்பேட்டை 118, வளசரவாக்கம் 92, அடையார் 29, திருவொற்றியூர் 22, மணலி 5, மாதவரம் 9, பெருங்குடி 10 மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 6 பேருக்கு கொரோனா பரவியிருக்கிறது. சென்னையில் கொரோனா வேகமாகப் பரவி வருவதால், ஏராளமானோரைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டியுள்ளது. இதனால், சென்னையில் 750 திருமண மண்டபங்களை மாநகராட்சி எடுத்துக் கொண்டு, அங்குப் படுக்கை வசதிகளைத் தயார் செய்துள்ளது. மேலும், சென்னை மற்றும் புறநகர்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளையும் மாநகராட்சி தயார் செய்து வருகிறது.

More News >>