சந்திரமுகி 2ம் பாகத்துக்கு ஜோதிகா செட் ஆவாரா? லாஜிக் சிக்கல் தீர்வென்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பிரபு, ஜோதிகா, நயன்தாரா நடித்த சந்திரமுகி படம் திரைக்கு வந்து பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவிருக்கிறது. முதல்பாகத்தில் ரஜினி ஏற்ற வேட்டையன் வேடம் பாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது. அதேபோல் ஜோதிகா நடித்த சந்திரமுகி பாத்திரமும் பேசப்பட்டது. இரண்டாம் பாகத்தில் வேட்டையன் வேடத்தை ராகவா லாரன்ஸ் ஏற்று நடிக்கிறார்.

2ம் பாகத்தில் சந்திரமுகி வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் சந்திரமுகி வேடத்தில் ஜோதிகாவே நடிக்க வேண்டும் என்று இயக்குனர் தரப்பு பேசிவருகிறது. விரைவில் இதுகுறித்து இயக்குனர் பி.வாசு ஜோதிகாவைச் சந்தித்து அவரிடம் கால்ஷீட் கேட்பார் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இதில் சிலர் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

முதல் பாக கதைப்படி ஜோதிகா கங்கா என்ற வேடம்தான் ஏற்று நடித்தார். அவர் மீது சந்திரமுகி ஆவி பிடித்திருப்பது போல் தான் காட்சி சித்தரிக்கப்பட்டது. அப்படியென்றால் நிஜமான சந்திரமுகி ஜோதிகா கிடையாது.அது வேறு ஒரு கதாபாத்திரம். லாஜிக் படி பார்த்தால் ஜோதிகா சந்திரமுகியாக நடித்தால் பொருத்தமாக இருக்காது, அந்த வேடத்தில் வேறு யாராவது நடித்தால் தான் பொருத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஒரு வேளை ஜோதிகா நடித்தால் அது வர்த்தக ரீதியாகப் படத்துக்குக் கைகொடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஆனால் இன்னொரு தரப்பு இதுபோன ஜென்ம கதையாக உருவாக இருப்பதால் ஜோதிகாவே கடந்த ஜென்மத்தில் சந்திரமுகியாக இருந்தார் கதை அமைக்கப்படும் பட்சத்தில் லாஜிக் பொருத்தமாகவே இருக்கும் என்று தெரிவிக்கின்றனர்.

More News >>