நான் தலைகீழ் ஆகி இரண்டு வருடம் ஆகிறது.. ரகுல் பிரீத் சொல்கிறார்..

கொரோனா வைரஸுக்கு பிறகு உலகமே தலை கீழ் ஆன நிலையில் இரண்டு வருடத்துக்கு முன்பே தான் தலை கீழ் ஆகிவிட்டதாக நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்திருக்கிறார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வீட்டிலிருக்கும் ரகுல் உடற்பயிற்சி செய்யும் வீடியோ வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது:கொரோனா தொற்றுக்கு பிறகு உலகமே தலைகீழ் ஆகியிருக்கும் நிலையில் கடந்த 2018ம் ஆண்டே நான் தலைகீழ் ஆகிவிட்டேன். அன்று முதலே நான் யோகா கற்கத் தொடங்கி தலைகீழ் யோகாசனம் முதல் வெவ்வேறு யோகாவையும் தினமும் செய்தது வருகிறேன். வாழ்க்கையே ஏற்றத்தாழ்வுடன் கூடிய பேலன்சுடன் தான் சுழல்கிறது.

எல்லா நேரத்திலும் நாம் நினைத்தது நடந்துவிடும் என்று எண்ணமுடியாது. சில சமயம் எல்லாவற்றையும் அடக்கி வாசித்தால் நன்மையாக இருக்கும். வேறு ஒன்றும் செய்யாமல் வழக்கமான வாழ்க்கைக்கு திரும்பி விடலாம்.இவ்வாறு கூறிய ரகுல் ப்ரீத் முதன்முறையாக அந்தரத்தில் தலைகீழ் யோகாசனம் செய்த தனது புகைப்படத்தை வெளியிட்டார்.

More News >>