லாரன்சுக்கு 1000 கிலோ அரிசி அனுப்பிய பார்த்திபன்..

கொரொனா ஊரடங்கால் ஏழைகள் வேலை இழந்து வருமானம் இன்றி கஷ்டத்தில் உள்ளனர். அப்படிப்பட்டவர்களுக்கு உதவ வேண்டும் என்று ரஜினி உள்ளிட்ட பல நடிகர்களுக்குக் கோரிக்கை வைத்தார் ராகவா லாரன்ஸ். இதையடுத்து லாரன்சுக்கு 100 மூட்டை அரிசி அனுப்பி வைத்தார் ரஜினி. தற்போது நடிகர் பார்த்திபன் 1000 கிலோ அரிசி அனுப்பி உள்ளார்.

இதுகுறித்து கூறியுள்ள லாரன்ஸ்.கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ நடிகர் பார்த்திபன் 1000 கிலோ அரிசி அனுப்பி உள்ளார். அதனை எங்களது நிவாரண குழு முறைப்படி விநியோகிக்கும். உங்களுக்குப் பெரிய மனது. நீங்கள் பலருக்கு உதவி செய்து வருவது எனக்கு நன்கு தெரியும். உங்களை எண்ணி பெருமை அடைகிறேன் என பார்த்திபனைப் பாராட்டி இருக்கும் லாரன்ஸ், பிடி அரிசி தானமும் பலரது பசியைப் போக்கும். இது இறைவனுக்கு செய்யும் தொண்டு எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More News >>