சாராய கடையில் பெண்கள் கியூ.. வர்மா கிளப்பும் புதிய சர்ச்சை..

இயக்குனர் ராம் கோபால் வர்மா பிரபலங்களைப் பற்றி வில்லங்கமாகக் கருத்துக்கள் கூறி சர்ச்சையில் சிக்குவது வழக்கம். ஊரடங்கு நாளில் அவர் பெண்களைப்பற்றி சர்ச்சை கருத்து வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆந்திராவில் கொரோனா ஊரடங்கால் மதுபானக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் நேற்று அங்கு மதுக்கடைகள் திறக்கப்பட்டபோது மது வாங்க ஆயிரக் கணக்கில் கூட்டம் அலைமோதியது. சில இடங்களில் போலீஸார் தடியடி நடத்திக் கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு புகைப்படம் வெளியிட்டிருக்கிறார். அதில் மது வாங்குவதற்குபெண்கள் பலர் தனி கியூவில் நிற்கின்றனர், அதற்கு கமென்ட் பதிவிட்ட வர்மா,மது வாங்க யார் கியூவில் நிற்கிறார்கள் என்று பாருங்கள்?ஆனால் இன்னும் குடிகாரர்களிடமிருந்து பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்று பலரும் பேசி வருகிறார்கள்எனக் குறிப்பிட்டிருக்கிறார்.வர்மாவின் இந்த பதிவிற்கு எதிர்த்தும் ஆதரித்தும் கமென்ட்கள் நெட்டில் பகிரப்படுகிறது.

More News >>