அனுஷ்கா படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு.. பெருந்தொகை கைமாறுகிறது..

ஜோதிகா நடித்துள்ள பொன்மகள் வந்தாள் படம் ஒடிடி தளத்தில் ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து வெங்கட் பிரபு தான் தயாரித்த ஆர்கே நகர் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட்டார்.பாகுபலி படத்தில் நடித்த அனுஷ்கா கடந்த 2 வருடத்துக்கும் மேலாக புதிய படத்தில் நடிக்காமல் ஒதுங்கியிருந்தார். கடந்த ஆண்டு நிசப்தம் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். இப்படம் முடிந்துசென்ற மாதம் திரைக்கு வருவதாக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தியேட்டர்கள் மூடப்பட்டன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் என்று காத்திருந்த நிலையில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் மீண்டும் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாமல் உள்ளது, இதனால் புதிய படங்களை ஒடிடி தளத்தில் வெளியிட சில தயாரிப்பாளர்கள் ஆர்வமாக உள்ளனர்.

அனுஷ்கா நடித்துள்ள நிசப்தம் படத்துக்கு முன்னதாகவே ஒடிடி தளத்தில் வெளியிட வாய்ப்பு வந்தபோது அதன் தயாரிப்பாளர்கள் மறுத்துவிட்டனர். தற்போது தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பது தெரியாததால் நிசப்தம் படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட ஒப்பந்தம் செய்திருக்கிறார்களாம். இதற்காக பெருந்தொகை ஒடிடி தளம் சார்பில் படத் தயாரிப்பாளருக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

More News >>