மாஸ்க் போட்டு வீதியில் நடந்த தீரன் நடிகை.. அடையாளம் கண்டுபிடித்ததும் ஓட்டம்..

கொரரோனா ஊரடங்கு எல்லோரையும் வீட்டுக்குள் முடக்கி இருப்பதுடன் தெருவில் சென்றால் மாஸ்க் (முககவசம்) அணிந்து செல்ல வேண்டி உள்ளது. இதனால் சாலையில் நம் அருகில் செல்பவர்கள் சாதாரண மக்களா? செல்ப்ரிட்டியா? என்று அடையாளம் காண முடியவில்லை.தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். மேலும் பல தமிழ்ப் படங்கள் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறார். ஊரடங்கால் மும்பையில் உள்ள தனது வீட்டில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.நேற்று அவர் முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு பாந்த்ரா பகுதியில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு தனியாக வந்து மருந்துகள் வாங்கினார். அவரை யாரும் அடையாளம் காண முடியவில்லை.

மருந்துகள் வாங்கிக்கொண்டு ரகுல் சாலையை கிராஸ் செய்தபோது ரசிகர் ஒருவர் அவரை அடையாளம் கண்டுபிடித்து ரகுல் நடந்து வருவதை செல்போன் வீடியோவில் படமாக்கியபடி, மேடம் மேடம் என்று அழைக்க அதைக் கண்டு ஷாக்கான ரகுல் பிரீத் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்றபடி ஓட்டம் பிடித்தார்.

More News >>