நடிகை தந்தையிடம் கத்தி முனையில் கொள்ளை.. முதல்வர்.. போலீசுக்குப் புகார்..

அ ஆ படத்தில் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக நடித்தவர் நிலா. ஜாம்பவான், லீ, மருத மலை, காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்ததுடன் தெலுங்கு படங்களில் மீரா சோப்ரா என்ற பெயரில் நடித்தார். தற்போது டெல்லியில் வசித்து வருகிறார். இவரது தந்தை டெல்லியில் காலையில் வாக்கிங் சென்ற போது ஸ்கூட்டரில் வந்த இரண்டு பேர் அவரிடம் கத்தி காட்டி செல்போனை பறித்துச் சென்றனர்.

இதை அறிந்த நிலா டிவிட்டர் பக்கத்தில், எனது தந்தையிடம் கத்தி காட்டி மிரட்டிக் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. அதுவும் போலீஸ் காலணியில். இதுதான் டெல்லியில் உள்ள நிலைமை என்று காட்டமாக மெசேஜ் பதிவிட்டு அதை டெல்லி முதல்வர் மற்றும் டெல்லி போலீசுக்கும் டேக் செய்திருந்தார். அவரது டிவிட்டர் மெசேஜுக்கு உடனடியாக டெல்லி போலீஸ் உயர் அதிகாரியிடமிருந்து டிவிட்டரில் பதில் வந்தது. எந்த போலீஸ் காலணியில் இந்த சம்பவம் நடந்தது என்பதைத் தெரிவியுங்கள். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதைக்கண்டதும் நிலா,பிரின்ஸ் சாலை அருகில் உள்ள போலீஸ் காலணியில் இந்த சம்பவம் நடந்தது என்று போலீசில் தந்த புகார் எண்ணுடன் மெசேஜ் பகிர்ந்தார். மேலும் அவர் கூறும்போது,டிவிட்டர் மெசேஜை பார்த்து உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய உயர் அதிகாரிக்கு நன்றி. போலீஸார் நம் பாதுகாப்புக்கு இருக்கிறார்கள் என்பதை அறியும்போது பெருமையாகவும். பாதுகாப்பு உணர்வும் ஏற்படுகிறது. என் பொருள் பறிபோனது என்பது பிரச்சனை அல்ல, ஆனால் மூத்தவர்களைப் பாதுகாப்பது என்பது முக்கியம். டெல்லி போலீசுக்கு என் மரியாதையைச் செலுத்துகிறேன்என குறிப்பிட்டுள்ளார்.

More News >>