சென்னையில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ்.. ராயபுரம் மண்டலத்தில் அதிகம்..

சென்னையில் ராயபுரம் மண்டலத்தில்தான் அதிக அளவுக்கு கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தற்போது 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது. மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிகபட்சமாக 3330 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 571 பேருக்குப் பரவியிருக்கிறது. அடுத்தபடியாக, கோடம்பாக்கம் 563, திரு.வி.க.நகர் 519, தேனாம்பேட்டை 360, வளசரவாக்கம் 274, அண்ணா நகர் 248, திருவொற்றியூர் 64, மணலி 27, மாதவரம் 46, தண்டையார்பேட்டை 231, அம்பத்தூர் 167, ஆலந்தூர் 25, அடையார் 159, பெருங்குடி 35, சோழிங்கநல்லூர் 25 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது.

More News >>