ஒடிடி தளத்தில் வெளியாகிறது கீர்த்தி சுரேஷ் படம்.. கார்த்திக் சுப்பராஜ் முடிவால் ஷாக்..

நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2018ம் ஆண்டு தமிழில் விஜய் நடித்த சர்க்கார் படத்தில் கடைசியாக நடித்தார். சென்ற ஒரு வருடமாகத் தமிழில் அவர் நடித்த படம் எதுவும் வெளியாகவில்லை.இந்நிலையில் அவர் நடித்துள்ள பென்குவின் என்ற படம் விரைவில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கர்ப்பிணிப் பெண்ணாக அவர் நடித்திருக்கிறார். இதற்கிடையில் கொரோனா ஊரடங்கு திரையுலகைக் கட்டிப்போட்டது. பட ரிலீஸ் முதல் ஷூட்டிங் நடப்பது வரை எல்லா பணிகளும் தடைப்பட்டது.

இதையடுத்து கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பென்குவின் படம் ஒடிடி தளத்தில் வெளியிட கார்த்திக் சுப்பராஜ் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இப்படத்தை பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் பேஷன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.

தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்று தெரியாததால் பென்குவின் படம் ஒடிடி தளத்தில் ஜூன் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது. இது தியேட்டர் உரிமையாளர்களுக்கும், திரையில் படம் எப்போது வெளியாகும் என்று காத்திருந்த கீர்த்தி சுரேஷுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறதாம்.

More News >>