மஞ்சு வாரியர் வீணை வாசித்தது யாருக்காக?

அசுரன் பட நடிகை மஞ்சு வாரியருக்குத் தமிழில் பட வாய்ப்புகள் வந்தபோதும் மலையாள படங்களிலேயே கவனம் செலுத்தி வருகிறார். கைநிறைய படங்கள் வைத்திருக்கும் மஞ்சு கொரோனா ஊரடங்கில் வீட்டில் பொழுதை கழிக்கிறார். வெட்டியாக இல்லாமல் குச்சிப்புடி நடனம் ஆடி பயிற்சி செய்வதுடன் வீணை வாசித்து வீடியோ பகிர்ந்த்திருக்கிறார் . மஞ்சு வீணை வசிக்கும் வீடியோவை ரசிகர்கள் மட்டுமல்லாமல் நடிகை கீர்த்தி சுரேஷ். நடிகர் ஜெயசூர்யா போன்ற பிரபலங்களும் பாராட்டி உள்ளனர். மஞ்சு வெளியிட்டுள்ள வீணை வசிக்கும் வீடியோவில் ஒரு ஓரத்தில் ஒரு பெண் இருப்பது தெரிகிறது. அந்த பெண் மஞ்சுவின் மகள் மீனாட்சியா என்று கேட்டிருப்பதுடன் மகளுக்காகத்தான் வீணை வாசித்தீர்களா? என்று கேட்டுள்ளனர்.

More News >>