சிம்புவிடம் போனில் பேசிய திரிஷா.. பேசவைத்த இயக்குனர். யார்?

'விண்ணைத்தாண்டி வருவாயா'' படத்தில் கார்த்திக் ஜெசியாக நடித்த சிம்பு, திரிஷா மறக்க முடியாத ஜோடியாக அமைந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்க இயக்குனர் கவுதம் மேனன் திட்ட மிட்டிருக்கிறார்.இதற்கிடையில் லாக் டவுன் குறும்படம் ஒன்றிற்கு திரிஷா, கவுதம் மேனன் திட்டமிட்டனர். இருவரும் அவரவர் வீட்டிலிருந்தே சில தினங்களுக்கு முன் ஆலோசித்து படமாக்கினர். கேமரா ஆங்கிள் எப்படி வைக்க வேண்டும் என்று கவுதம் சொல்ல அதன்படி திரிஷாவே கேமரா கோணத்தை வைத்துக் கொண்டு நடித்தார்.

இந்த குறும்படத்துக்கு 'கார்த்திக் டயல் செய்த எண்' என்று பெயரிடப்பட்டுள்ளது. லாக்டவுனில் கார்த்திக் கதாபாத்திரம் ஜெசியுடன் பேசுவதுபோல் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது. இந்த குறும்படம் விரைவில் வெளியாக உள்ளது. குறும்படத்தில் போனில் திரிஷா, சிம்பு பேச வைத்த கவுதம் மேனன் சீக்கிரமே வி டி வி 2ம் பாகத்தில் ஜோடி சேர்த்து பேச வைப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

More News >>